back to top
24.9 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeஅரசியல்"காவல்துறை, முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?" - உதயநிதி ஆவேசம்! - Kumudam

“காவல்துறை, முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?” – உதயநிதி ஆவேசம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருந்த பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகக் கூறி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற இருந்த பேரணி :

தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பெரியார் பிறந்த ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பேரணி நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு :

பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரத்தில், வலதுசாரி அமைப்புகள் நடத்தும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் காவல்துறையின் அணுகுமுறை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

“முதலமைச்சர் யாரை திருப்திப்படுத்துகிறார்?” :

பெரியார், அண்ணா ஆகியோரை தங்களது கொள்கைத் தலைவர்களாகக் கூறும் முதலமைச்சர், அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா அல்லது வேறு தரப்பினரின் அழுத்தத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்” :

பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிகளுக்கு காவல்துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், ஜனநாயக ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here