back to top
22.3 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடுவிஜய்யுடன் நெருக்கம்... ஆளுநராகும் கிரண் குமார் ரெட்டி ? - Kumudam

விஜய்யுடன் நெருக்கம்… ஆளுநராகும் கிரண் குமார் ரெட்டி ? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாடு கவர்னராக ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டியை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் பொறுப்பில் கேரள கவர்னர்:

தமிழ்நாடு கவர்னராக இருந்த ஆர்.என். ரவி பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு நிரந்தர கவர்னரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியின் பெயர் தமிழ்நாடு கவர்னர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த கிரண் குமார் ரெட்டி?

நல்லாரி கிரண் குமார் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக அரசியலில் வளர்ந்த இவர், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டதற்கு கிரண் குமார் ரெட்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் சில ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகியிருந்த கிரண் குமார் ரெட்டி, 2023ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

விஜய் – கிரண் குமார் ரெட்டி தொடர்பு காரணமா?

கிரண் குமார் ரெட்டியை தமிழ்நாடு கவர்னராக நியமிப்பது தொடர்பான தகவல்களுக்கு பின்னணியில் அரசியல் கணக்குகளும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் கிரண் குமார் ரெட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த நியமனம் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

எனினும், இந்த தகவல்கள் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

கவர்னர் பதவிக்கு ஏன் கிரண் குமார் ரெட்டி?

நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட கிரண் குமார் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் என முக்கிய அரசியலமைப்புப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

நிர்வாக அனுபவம், அரசியல் பின்னணி மற்றும் தேசிய அளவிலான அரசியல் தொடர்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கவர்னர் பதவிக்கு அவர் பொருத்தமான தேர்வாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்?

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டிற்கு நிரந்தர கவர்னர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, கிரண் குமார் ரெட்டி பெயர் தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here