back to top
20.4 C
London
Monday, August 17, 2026
No menu items!
Homeஅரசியல்"கருணாநிதி" என குறிப்பிட்ட அமைச்சர்! பாடம் எடுத்த மாஜிக்கள்... - Kumudam

“கருணாநிதி” என குறிப்பிட்ட அமைச்சர்! பாடம் எடுத்த மாஜிக்கள்… – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து குறிப்பிட்டார்.

“கலைஞரின் கொள்கைப் பிடிப்பும், மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.”

மேலும், திமுக ஆட்சியில் கொள்கை விளக்கக் குறிப்புகள் 400 பக்கங்கள் கொண்டிருந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் அது 300 பக்கங்களாக குறைந்துள்ளதாக சாத்தூர் ராமச்சந்திரன் விமர்சித்தார்.

“திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்கக் குறிப்பு இருந்தது. தவெக ஆட்சியில் அது 300 பக்கங்களாகக் குறைந்துள்ளது.”

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், பக்கங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்; ஆனால் அரசின் கொள்கைகளும் லட்சியங்களும் குறையவில்லை என்று தெரிவித்தார்.

“பக்கங்கள்தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கையும், லட்சியங்களும் குறையவில்லை.”

மேலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலக்குகளையும் அரசு நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.

“தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. அந்த லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது.”

பட்டா வழங்கிய விவகாரத்தில் மோதல்:

பட்டா வழங்கும் திட்டம் தொடர்பாக பேசிய சாத்தூர் ராமச்சந்திரன், திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

“திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம்.”

மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் திமுக ஆட்சிக் காலத்தில் 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம் மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலங்களை மீட்டெடுத்தது திமுக அரசு என்றும் சாத்தூர் ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.

“சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் மு.க.ஸ்டாலின்.”

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன், பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த இடங்கள் தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தார்.

 “பட்டா கொடுத்தீர்கள். ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள்தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை.”

இதற்கு மீண்டும் பதிலளித்த சாத்தூர் ராமச்சந்திரன்,

“ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கியுள்ளோம்.” என்றார்.

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், “முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.” எனக் கூறினார்.

மகளிர் உரிமைத்தொகை குறித்தும் விவாதம்:

மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாகவும் சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. தவெக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக சாத்தூர் ராமச்சந்திரன் குறிப்பிட்டு, அது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

“தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை வழங்காதது ஏன்?”

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசு பொறுப்பேற்று 100 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

“100 நாட்கள்தான் முடிந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம்.”

மேலும், திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை உடனடியாக வழங்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

“மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் தந்தது.”

இதற்கு பதிலளித்த சாத்தூர் ராமச்சந்திரன், “கொரோனா பெருந்தொற்று காரணமாகவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.” விளக்கம் அளித்தார்.

“கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாகத் தந்தது.”

 அமைச்சர் ராமசந்திரன் ” மக்களிடம் கூறிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை, ஆனால் அதை வைத்துதான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள்” என்று விமர்சித்தார்.

இதற்கு அமைச்சர் ரஞ்சித்குமார் திடீரென எழுந்து “நங்கள் வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டு பெற்றோம், ஆனால் நீங்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் வாக்கு வாங்குனீர்கள் என்றும்,

“இந்த வாகுக்கு பணம் கொடுப்பதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி”என்று குறிப்பிட்டார்.

இதற்கு உடனே சபாநாயகர் குறுக்கிட்டு “அமைச்சர் ரஞ்சித்குமார் கூறிய குற்றச்சாட்டைஅவைகுறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என தெரிவித்தார்.

இதற்கு திமுக கொறடா “முன்னாள் முதலமைச்சர்கள் பெயரை சட்டசபையில் சொல்லக்கூடாது எனவும், சபை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

அதன்பின், அமைச்சர் செங்கோட்டையன்,

“திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில்தான் கொரோனா பெருந்தொற்று வந்தது.” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,

“கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்றுதான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என்று சொல்லவில்லை.” என்று கிண்டலாக தெரிவித்தார்.

மழை, வெள்ளம் மற்றும் நிவாரண நிதி குறித்தும் கேள்வி:

“கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோது, நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கோரப்பட்டுள்ளது” என சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, “எங்களை நோக்கி அப்பாவ காணோம் என்று கூறும் விமர்சனங்களுக்கு, எங்கள் தலைவர் மீண்டும் இங்கு வரும்போது நீங்கள் யாரும் இங்கு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “நீங்கள் மீண்டும் இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை அதற்கு தமிழக மக்கள் ஒருநாளும் அனுமதிக்க மாட்டார்கள், அதற்கு சான்றுதான் இந்த ஆட்சி” என்று கூறினார்.

இவ்வாறு சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் பல்வேறு திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கடந்த ஆட்சிகளின் செயல்பாடுகள் குறித்து திமுக மற்றும் தவெக தரப்பினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here