back to top
16.9 C
London
Wednesday, August 12, 2026
No menu items!
Homeஅரசியல்செ.பா.வின் கூட்டாளி எங்கே? லஞ்ச ஒழிப்புத்துறைய வளையத்தில் ரத்தீஷ்..! உதய்-க்கு சிக்கலா? - Kumudam

செ.பா.வின் கூட்டாளி எங்கே? லஞ்ச ஒழிப்புத்துறைய வளையத்தில் ரத்தீஷ்..! உதய்-க்கு சிக்கலா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் சரக்கு விநியோகம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளில் கிடைத்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், டாஸ்மாக் தொடர்பான சில முக்கிய முடிவுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வட்டாரங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரத்தீஷ் வேலுவின் பெயரும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதல் தொடர்பான சில நடவடிக்கைகளில் ரத்தீஷின் செல்வாக்கு இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் அவரது பங்கு இருந்ததா, இதன் மூலம் யாருக்கு பலன் கிடைத்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ரத்தீஷ் தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றும், அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம் என்ற தகவலும் விசாரணை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்ற கோணத்திலும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் உண்மையில் வெளிநாட்டில் உள்ளாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ரத்தீஷ் வேலுவுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் நீண்டகால தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் ஸ்டாலின் குடும்பம் வசித்த காலத்தில் ஏற்பட்ட குடும்ப நட்பு, பின்னர் உதயநிதியுடனான நெருக்கமாக மாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைத்துறையிலும் ரத்தீஷுக்கு வாய்ப்புகள் உருவானதற்கு உதயநிதியுடனான அவரது நெருக்கம் முக்கிய காரணமாக இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் மூலம் சினிமா மற்றும் அரசியல் சார்ந்த பல்வேறு தரப்பினருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கட்சியின் முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் ரத்தீஷின் செல்வாக்கு அதிகரித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக உதயநிதிக்கு நெருக்கமான நபராக அவர் செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது டாஸ்மாக் வழக்கில் அவரது பெயர் விசாரணைக்கு வந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் ரத்தீஷிடம் விசாரணை நடத்தப்பட்டால், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ரத்தீஷுக்கும் உதயநிதிக்கும் இடையிலான தொடர்பு குறித்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும், ரத்தீஷ் மீது இதுவரை நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தகட்ட விசாரணை இந்த விவகாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here