back to top
21.5 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்ஜூன் 22- முதல்வர் விஜய் பிறந்தநாள்: தவெகவினர் அட்ராசிட்டி செய்யக்கூடாது, புஸ்ஸிஆனந்த் கறார்! - Kumudam

ஜூன் 22- முதல்வர் விஜய் பிறந்தநாள்: தவெகவினர் அட்ராசிட்டி செய்யக்கூடாது, புஸ்ஸிஆனந்த் கறார்! – Kumudam

Date:

Related stories

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்...

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் – Kumudam

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் - Kumudam -...
spot_imgspot_img


சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில்  பேசிய புஸ்ஸி ஆனந்த், நம் கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

தவெக ஆட்சி அமைந்து, முதல்வர் ஆகி முதல் பிறந்தநாள். அதனால், இதுவரை இல்லாத அளவிற்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுங்கள். முதலமைச்சர் எந்த விதத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் த.வெ.க.வினர் செயல்பட கூடாது என உத்தரவிட்டு உள்ளார். 

அந்த வகையில் பிறந்தநாளையொட்டி பேனர்கள், கட்-அவுட் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் அட்ராசிட்டியில் தவெகவினர் ஈடுபடக்கூடாது.  இதற்கு எல்லாம்  முதலில் சரி என்று சொல்கிறீர்கள். விழாவுக்கு நாங்கள் வரும்போது பேனர்கள் உள்ளது. இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டால் தொண்டர்கள் வைத்து விட்டார்கள் என கூறுகிறீர்கள். எனவே இனி த.வெ.க. சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். 

முதலமைச்சர் விஜய் உத்தரவுக்கிணங்க பேனர் கலாச்சாரம் என்பது த.வெ.க.வில் இருக்கக்கூடாது. அப்படியும் மீறி வைத்தால் அதுகுறித்து விசாரித்து நிர்வாகி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல திமுக, அதிமுக என பலகட்சியில் இருந்தும் தவெகவில் வந்து இணைக்கிறார்கள். அவர்களுக்கு கட்சி பதவி கொடுத்து கெளரவிக்க வேண்டியது நமது கடமை. 

இதனால் தவெக தற்போதைய நிர்வாகிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரம் செயல்படாத நிர்வாகிகள், கோஷ்டி மோதலில் ஈடுபடுபவர்களுக்கு தானஅ பாதிப்பு ஏற்படும். அதே போன்று மாற்றுக்கட்சியினருக்கு கட்சி பதவி கொடுக்கும் போது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை ஆலோசித்து தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் பேசியதாக தெரிகிறது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here