back to top
16.1 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeசினிமாவிஜய் சேதுபதி பேச்சு சர்ச்சை.. தவெக எம்.எல்.ஏ சுகுமார் கடும் எச்சரிக்கை! - Kumudam

விஜய் சேதுபதி பேச்சு சர்ச்சை.. தவெக எம்.எல்.ஏ சுகுமார் கடும் எச்சரிக்கை! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 29 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் தலைவராக இருந்த பிளாக் பாண்டி உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறியதைத் தொடர்ந்து, ஷாத்திகா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்திய எபிசோடில் தலைமைப் பொறுப்பு தொடர்பாக ஷாத்திகாவிடம் விஜய் சேதுபதி சில கடுமையான கருத்துகளை முன்வைத்தார். தலைமை என்பது வெறுமனே வாக்குறுதிகளை வழங்குவது மட்டுமல்ல என்றும், பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் மற்றவர்கள் மீது பழியைப் போடுவது சரியான தலைமைத்துவம் அல்ல என்றும் அவர் கூறினார்.

மேலும், பொறுப்பில் இருப்பவர்களிடம் கருத்து கேட்கப்பட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது கடமையில் இருந்து விலகக் கூடாது என்றும் விஜய் சேதுபதி வலியுறுத்தினார்.

அரசியல் சர்ச்சையான விஜய் சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதி பேசிய இந்த கருத்துகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, தலைமை, பொறுப்பு, பிரச்சினைகளை எதிர்கொள்வது போன்ற விஜய் சேதுபதியின் கருத்துகளை முதலமைச்சர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளுடன் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர்.

இதனால் விஜய் சேதுபதி மறைமுகமாக விஜய்யை விமர்சித்தாரா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரின் தலைமைத்துவத்தைப் பற்றிய கருத்து மட்டுமே என்றும், அதை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதியின் பேச்சும் அரசியல் விவாதமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தவெக எம்.எல்.ஏ சுகுமார் எதிர்ப்பு

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் பேச்சுக்கு சூலூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ சுகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், ஏற்கெனவே சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த விஜய் சேதுபதியின் பேச்சு, தற்போது அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி விளக்கம் அளிப்பாரா?

தன்னைச் சுற்றி சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், விஜய் சேதுபதி இதுவரை தனது பேச்சு யாரைக் குறிப்பிட்டு கூறப்பட்டது என்பது குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், அவர் உண்மையில் அரசியல் ரீதியாக ஏதேனும் கருத்தை தெரிவிக்க முயன்றாரா அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே அந்த கருத்துகளை தெரிவித்தாரா என்ற விவாதம் தொடர்கிறது.

மேலும், வரும் பிக்பாஸ் வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இந்த விவகாரம் குறித்து ஏதேனும் விளக்கம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த கருத்துகள் மற்றும் தவெக தரப்பின் எதிர்வினைகள் இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்யுமா என்பது இனி தெரியவரும்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here