back to top
21.4 C
London
Sunday, September 13, 2026
No menu items!
Homeதமிழ்நாடுபட்டிமன்றத்தின் குரல் ஓய்ந்தது... அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்! - Kumudam

பட்டிமன்றத்தின் குரல் ஓய்ந்தது… அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்! – Kumudam

Date:

Related stories

லண்டன் டூ தாராபுரம்… கேப் விடாத விஜய்… கேண்டிடேட்டுக்காக சுடசுச பிரசாரம்..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பணிகளை...

Mandaadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வரும் கே.என். நேருவைச்...

Mandadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...

திமுகவா? தவெகவா?இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு ?

திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு...
spot_imgspot_img



பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய உலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழ்நாடு மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், தமிழ் இலக்கியங்கள் குறித்த தனது ஆழமான உரைகளாலும் புகழ்பெற்றார். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பிலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமா என செய்தியாளர்கள் அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சாலமன் பாப்பையா ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த அரசு மரியாதை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here