back to top
19.6 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடுவிஜய் டேபிளில் இருந்த அந்த 3 Files இவை தானா? - Kumudam

விஜய் டேபிளில் இருந்த அந்த 3 Files இவை தானா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனது மேஜையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய மூன்று முக்கிய கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை விரைவில் திறக்க இருப்பதாகவும் விஜய் கூறியிருந்தார்.

இதனால், எதிர்க்கட்சிக்கு எதிரான புதிய ஆவணங்கள், மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அல்லது இதுவரை வெளிவராத முக்கிய ஆதாரங்கள் சட்டப்பேரவையில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், சட்டப்பேரவையில் விஜய் முன்வைத்த விவரங்கள் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. அவர் சுட்டிக்காட்டிய முக்கிய விவகாரங்கள் ஏற்கனவே பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட பழைய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் பேசப்பட்ட சர்காரியா கமிஷன் விவகாரம்

1970-களில் நடைபெற்ற வீராணம் குடிநீர் திட்டம் தொடர்பான ஒப்பந்த விவகாரத்தை விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். அந்தக் காலத்தில் ஒப்பந்தம் தொடர்பாக கமிஷன் பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷன் விசாரணையிலேயே இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இதனால், பல தசாப்தங்கள் பழமையான அந்த விவகாரம் தற்போது மீண்டும் சட்டப்பேரவை விவாதத்திற்கு வந்துள்ளது.

அமலாக்கத்துறை ஆவணங்களும் பழையதா?

அதேபோல், திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தங்கள் மற்றும் கட்சி நிதி தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டதாக விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட அளவு தொகை முறைகேடாக பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும், சம்பந்தப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதனால், “மூன்று முக்கிய கோப்புகள்” என விஜய் குறிப்பிட்டது புதிய விசாரணைகளின் ஆவணங்களா அல்லது ஏற்கனவே வெளியில் தெரிந்த தகவல்களைக் கொண்ட கோப்புகளா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அந்த 3 Files எங்கே?

ஒரு புதிய அரசு, முந்தைய ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட புதிய விசாரணைகள், புதிதாக திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் அதன் அடிப்படையில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆனால், விஜய் சட்டப்பேரவையில் குறிப்பிட்ட விவரங்கள் பெரும்பாலும் ஏற்கனவே அறியப்பட்ட சர்காரியா கமிஷன் தகவல்கள் மற்றும் மத்திய அமைப்புகளின் பழைய ஆவணங்களைச் சுற்றியே இருந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனால், விஜய் குறிப்பிட்ட அந்த மூன்று கோப்புகளில் இன்னும் வெளியிடப்படாத புதிய தகவல்கள் உள்ளனவா? அல்லது அவை ஏற்கனவே பொதுவெளியில் இருக்கும் விவகாரங்களின் தொகுப்பா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

“மூன்று கோப்புகளைத் திறப்பதற்கு முன் ஒரு சாம்பிள் பார்ப்போம்” என விஜய் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அடுத்தகட்டமாக அவர் குறிப்பிடும் கோப்புகளில் புதிய ஆதாரங்கள் வெளியாகுமா என்பதே தற்போது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here