Home அரசியல் கரூர் தவெகவில் கோஷ்டி மோதல்.. இடைத்தேர்தல் சீட் யாருக்கு? எகிறும் டென்ஷன்! – Kumudam

கரூர் தவெகவில் கோஷ்டி மோதல்.. இடைத்தேர்தல் சீட் யாருக்கு? எகிறும் டென்ஷன்! – Kumudam

0



அ.திமுக.விலிருந்து வெளியேறி த.வெ.க.வில் இணைந்த மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், த.வெ.க. மாவட்டச் செயலாளர் மதியழகனும் ஆளுக்கொரு கோஷ்டியாக பிரிந்து கடுமையாக மோதிக்கொள்வதால் உட்கட்சிக்குள் குழப்பமும், இடைத்தேர்தலில் யாருக்கு சீட் என டென்ஷனும் எகிறியிருப்பதுதான் கரூர் த.வெ.க. ரணகளம்!

முதல்வர் விஜய் கடந்த ஜூலை 10ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கரூர் வந்திருந்தார். அதையொட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகிய இருவரும் மேடை அமைப்பதில் தொடங்கி, இருக்கைகளை சரி செய்வது வரை இணைந்த கைகளாக நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால், விஜய் கரூரை விட்டுச் சென்ற அடுத்த நிமிடத்திலிருந்து இருவரும் கோஷ்டி அரசியலை தொடங்கிவிட்டார்கள்.

உதாரணத்துக்கு, கரூர் அமராவதி பழைய பாலத்தில் நடைப்பயிற்சி செய்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாலம் திடீரென மூடப்பட்டதால், அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர விஜயபாஸ்கர் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்கச் சென்றார். அப்போது அவருடன் த.வெ.க.வினர் யாரும் செல்லவில்லை. த.வெ.க.வில் சேர்ந்த அதி.மு.க.வினர் மட்டுமே சென்றிருந்தார்கள்.

அதேபோல் கடந்த ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழா கரூரில் நடந்தது. விழாவில் மதியழகன் உள்ளிட்ட த.வெ.க.வினரும் கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸார் மட்டுமே கலந்துகொண்டார்கள். நிகழ்வில், விஜயபாஸ்கரோ அவருடன் த.வெ.க.வில் இணைந்தவர்களோ கலந்துகொள்ளவில்லை. ஆகஸ்ட் 3ம் தேதி நடந்த தவெ.க. தெற்கு நகர அலுவலக திறப்பு விழாவிலும் விஜயபாஸ்கர் அண்ட் கோ மிஸ்ஸிங். இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மதியழனுக்கு ஆதரவாக களமாடுவதும் விவகாரத்தின் வீரியத்தை அதிகரித்திருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக. நிர்வாகி ஒருவர், “விஜயபாஸ்கருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் நிச்சயமாக வழங்கப்படும். அமைச்சர் பதவியும் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா 3084 ஏக்கர் செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்தார். முதல்வர் கரூர் வந்து சென்றபிறகு விஜயபாஸ்கரோடு த.வெ.க.வினர் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று மா.செ. உத்தரவு போட்டிருப்பதாக சொன்னார்கள்.

அதேபோல் போஸ்டர்களில் விஜயபாஸ்கர் படத்தைப் போடக்கூடாது என்றும் மாவட்டச் செயலாளர்கள் உத்தரவிட்டிருக் கிறார்கள். காமராஜர் பிறந்த நாள் விழாவையும் அவர்கள் மட்டுமே கொண்டாடினார்கள். விஜயபாஸ்கரையும் எங்களையும் அழைக்கவில்லை. இதனால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். அ.தி.மு.கவிலேயே இருந்திருந்தாலாவது மரியாதை இருந்திருக்கும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரான விஜயபாஸ்கரை எதிர்த்து நின்றவர் மதியழகன். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்றுப் போனார். அதனால் இப்போது அரசு  மீண்டும் மதியழகனுக்கே சீட் வழங்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதனாலேயே, விஜயபாஸ்கருக்கும் அவருடன் வந்த எங்களுக்கும் முக்கியத்துவம் தர மறுக்கிறார்கள். நாங்களாகத்தான் எங்களை தவெ.கவினர் என சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வெண்ணைமலை இனாம் நிலப் பிரச்னையை முதல்வர்தான் தீர்த்து வைத்தார். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ்காரர்கள் ஒட்டிய போஸ்டரில், முதல்வர் விஜய்யை கர்த்தராகவும், ஜோதிமணியை மாரியம்மனாகவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டினார்கள். இதை பொதுமக்கள் கிண்டலடித்தனர். இதை மாவட்டச் செயலாளர் கவனத்திற்கு கொண்டுசென்றோம். அதற்கும் அவரிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. என்னதான் அசுரபலத்துடன் ஆளுங்கட்சியாக இருந்தாலும், கோஷ்டி மோதல் ஜாசப் விஜ இருந்தால் எவ்வளவு பெரிய அரசியல் கட்சியும் படுத்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார் ஆதங்கமாக.

இதுபற்றி மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் கேட்டோம் அமராவதி பாலம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனரை எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்திக்க செல்லும்போது என்னை அழைக்கவில்லை. அழைத்திருந்தால் நிச்சயம் சென்றிருப்பேன். அதேநேரம் ‘காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு வாருங்கள்’ என்று நான் விஜயபாஸ்கரை தொலைபேசியில் அழைத்தேன். ‘மதுரையில் இருக்கிறேன் அப்படியே சென்னை செல்கிறேன்’ என்றார். அதேபோல் முதல்வரை கர்த்தராகவும், ஜோதிமணியை அம்மனாகவும் சித்தரித்த போஸ்டர் மிகவும் கண்டனத்துக்குரியது. இதனால் ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், காங்கிரஸ்காரர்கள் செய்வதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

இடைத்தேர்தலில் முதல்வர் யாருக்கு சீட் கொடுத்தாலும் பணி செய்ய தயாராக இருக்கிறேன். முதல்வர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் என் அரசியலே இருக்கும். முதல்வருக்கும் கட்சிக்கும் மிகவும் விசுவாசமாக இருப்பேன். நான் யாரையும் ஒதுக்குவதும் இல்லை. கோஷ்டியாக செயல்படுவதும் இல்லை” என்றார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இதுபற்றி கேட்க தொடர்புகொண்டோம். அவரது போன் சுவிட்ச் ஆஃபில் இருந்ததால், “கட்சி பதவி இருந்தால்தான் எங்களால் செயல்பட முடியும். பதவி இல்லாமல் அரசியல் செய்வது கடினம் என இரண்டு விஜயபாஸ்கர்களும் கட்சியில் சேரும்போதே முக்கிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதன்படி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என இரு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

தாமதமாக கிடைத்த அங்கீகாரம் என்றாலும் மகிழ்ச்சிதான். கரூர் இடைத்தேர்தலை பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் முதல்வர் விஜய் கையில்தான் இருக்கிறது. இப்போதைக்கு காலம் பதில் சொல்லும் என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் பொறுமையாக இருக்கிறார்” என்றனர்.

கரூர் அரசியல் எப்போதுமே கலவரம்தான்!



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version