Home தமிழ்நாடு ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல் தான்… ஸ்டாலின் தாக்கு..! – Kumudam

ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல் தான்… ஸ்டாலின் தாக்கு..! – Kumudam

0


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் குடும்பங்கள் புகார் அளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து வரும் புகார்கள் மற்றும் வேதனைகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அதற்கு உரிய தீர்வு காணப்படும் வரை பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அரசு உடனடியாக நீட்டிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், தவறான கணக்கீடுகளால் மக்கள் தேவையற்ற சிரமங்களையும் பொருளாதாரச் சுமையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனி வரும் காலங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடும் மீட்டர் ரீடிங் (Meter Reading) பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மின்சாரத் துறையில் நிர்வாகக் குறைபாடுகள் மீண்டும் நிகழாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version