back to top
29.4 C
London
Monday, July 6, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதவெக ஆட்சியை கவிழ்க்க சதி; நடந்தது என்ன?..... - Kumudam

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; நடந்தது என்ன?….. – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சதித்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

தகவல்களின் படி, தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நரேஷை முதன்முதலில் அசோக் குமார் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. சில எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து தங்கள் தரப்புக்கு இழுக்க வேண்டும் என நரேஷிடம் அசோக் குமார் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை திருநாவுக்கரசு மூலமாக செய்து முடிக்கலாம் என்ற யோசனையை நரேஷ் முன்வைத்ததாகவும், தவெக நிர்வாகிகளுடன் திருநாவுக்கரசு தொடர்பில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தன்னிடம் முன்பு பணியாற்றிய ஓட்டுநர் கிருஷ்ணா தற்போது திருநாவுக்கரசுவிடம் பணியாற்றி வருவதாக நரேஷ் தெரிவித்ததாகவும், கிருஷ்ணா மூலமாகவே திருநாவுக்கரசுவை அவர் தொடர்புகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசுவை செந்தில்பாலாஜியின் தம்பியிடம் அறிமுகப்படுத்தியதாகவும், கரூரைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் ஆகியோரை நரேஷிடம் அசோக் குமார் அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இனிமேல் தேவையான விவகாரங்கள் அனைத்தையும் அவர்களுடன் இணைந்து பேசி முடிவு செய்யுமாறு அசோக் குமார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், திருநாவுக்கரசு தனது தரப்பில் தியாகராஜன் என்பவரையும் இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சதித்திட்டத்தில் இணைந்திருந்தாலும், நரேஷிடம் இருந்து பணம் பறிப்பதே திருநாவுக்கரசுவின் உண்மையான நோக்கமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மதுபோதையில் இருந்தபோது ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ.வுக்கு திருநாவுக்கரசு தொலைபேசியில் பேசியதாகவும், அந்த உரையாடலை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் சில நாட்கள் சதித்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த திருநாவுக்கரசு மற்றும் நரேஷ் இடையே ஏற்பட்ட மோதலே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வர காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து சதித்திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here