back to top
24.2 C
London
Monday, June 29, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசென்னையில் ஜன.16ல் பன்னாட்டு புத்தகத் திருவிழா- அமைச்சர் அன்பில் மகேஷ் - Kumudam

சென்னையில் ஜன.16ல் பன்னாட்டு புத்தகத் திருவிழா- அமைச்சர் அன்பில் மகேஷ் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது”, சிறந்த நூலகங்கள் மற்றும் வாசகர் வட்டங்களுக்கு கேடயம் வழங்கி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா(CIDF) 2025-ஐ அறிமுகம் செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாப்பேருரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்ய புத்திரன், சென்னை நூலக ஆணைய குழு தலைவர் கோபண்ணா, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் சோ.மதுமதி, பொது நூலக இயக்குனர் பொ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ தமிழை உலகிற்கும் உலக அளவில் இருக்கும் என்ற உன்னதமான நோக்கில் தமிழக அரசால் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2025 ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது என்று அறிவித்தார்.2025 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில் மதிப்புறு விருந்தினராக (Guest of Honour) இத்தாலியைச் சேர்ந்த பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் கலந்து கொள்ள உள்ளது என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பன்னாட்டு புத்தக திருவிழா 2025 பற்றி காணொளி வெளியிடப்பட்டது. சர்வதேச புத்தக திருவிழா 2023 ஆம் ஆண்டு 47 புத்தகங்களும் , 2024 88 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில் 50 நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று காணொளி காட்சியில் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இதுபோன்ற பன்னாட்டு புத்தக திருவிழாவை நடத்திக் காட்டியது கிடையாது. நம்முடைய முதல்வர் ஆட்சி காலத்தில் நடந்து வருகிறது.

சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளில் 86,44,190 பொதுமக்கள் பார்வையிட்டு, அதில் ரூ.69.20 கோடி  மதிப்பில்  81,44,525 நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பன்னாட்டு புத்தகவிழா எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் சிறப்பாக நடத்தி வருகிறோம். 2025ம் ஆண்டு நடைபெறும் புத்தக விழாவில் 50 நாடுகள் கலந்துகொள்ள வைப்பது, 1000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட திட்டமிடப்பட்டுள்ளது.சாதாரணமாக புத்தக விழா நடைபெறவில்லை. பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்து இங்கு புத்தக விழா நடத்தி வருகிறோம். மொழிபெயர்ப்பு பணிக்காக 3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார், 1958 நூலகங்களில் ஃவைபை வசதி செய்து தரப்பட்டுள்ளது.புத்தகங்களை குழந்தைகளைப்போல் பார்த்து கொள்ளும் நூலகர்களுக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சி என்று கூறிய அவர், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க போராடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம்” என்றார்



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here