back to top
26.4 C
London
Tuesday, June 23, 2026
No menu items!
Homeதமிழ்நாடு14 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு! - Kumudam

14 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


குறிப்பாக சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் ஐஜி, ஏடிஜிபி நிலை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த ஆயுஷ் மணி திவாரி, தமிழக காவல்துறை தலைமையகப் பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் காவல் ஆணையராக இருந்த ராஜேந்திரன், மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த கபில் குமார் சரத்கர், சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த பர்வேஷ் குமார், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த ராஜேஷ்வரி, திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் காவல் ஆணையராக இருந்த அனில் குமார் கிரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த கார்த்திகேயன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி, சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் ஐஜியாக இருந்த ஏ.ஜி. பாபு, சென்னை காவல்துறை தலைமையகப் பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையகப் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த ஜோஷி நிர்மல் குமார், சேலம் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறை விரிவாக்கப் பிரிவின் ஐஜியாக இருந்த தேன்மொழி, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த ராதிகா, காவல்துறை நிர்வாகப் பிரிவின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறை நிர்வாகப் பிரிவின் ஐஜியாக இருந்த மகேஷ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பிரிவின் ஐஜியாக இருந்த துரைக்குமார், காவல்துறை விரிவாக்கப் பிரிவின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் காவல்துறையின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here