back to top
25 C
London
Saturday, June 20, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசென்னையில் முகாமிட்ட கரூர் போலீஸ்; செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தீவிரமாக தேடும் தனிப்படை! -...

சென்னையில் முகாமிட்ட கரூர் போலீஸ்; செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தீவிரமாக தேடும் தனிப்படை! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


அசோக் கரூரில் இல்லாதது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியாக கரூர் தனிப்படை போலீஸார் சென்னை வந்துள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார், சென்னையின் முக்கிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கே நேரடியாக சென்ற போலீஸார், அங்கு விசாரணை மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அசோக்கை எந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தேடி வருகின்றனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால், போலீஸ் நடவடிக்கைக்கு பின்னால் என்ன காரணம் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும், கரூர் மாவட்டத்திலும் பரவலாக எழுந்துள்ளது. வழக்கின் தன்மை குறித்த தெளிவான விளக்கம் இல்லாததால் பல்வேறு ஊகங்கள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னதாக, அசோக் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள கஸ்தூரி நகர் பகுதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற கரூர் போலீஸார், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடுகளில் சோதனை நடத்த முயன்றனர். ஆனால், அசோக் தொடர்புடையதாக கூறப்படும் வீடுகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீஸார், அசோக் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேறு எங்காவது தங்கியிருக்கிறாரா என்பதை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளனர். அவருடன் தொடர்பில் இருப்பவர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தைச் சுற்றி போலீஸ் நடவடிக்கை தீவிரமடைந்திருப்பதால், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அசோக்கை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் நடவடிக்கை தொடரும் என்றும், விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கரூரில் தொடங்கிய போலீஸ் தேடுதல் நடவடிக்கை தற்போது சென்னையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசோக் எங்கே இருக்கிறார்? ஏன் சென்னையில் குறிப்பிட்டு போலீசார் அவரை தேடுகிறார்கள்? போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here