Home அரசியல் தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூலை மாதம் இடைத்தேர்தல் ? – Kumudam

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூலை மாதம் இடைத்தேர்தல் ? – Kumudam

0



தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் தனிபெருபான்மை கிடைக்காத காரணத்தால் காங், விசிக, கம்யூ.., கட்சிகள் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே அதிமுகவில் தவெக ஆதரவு அணி ஒன்று உருவானது. எஸ்.பி.வேலுமணி தலைமையில் உருவான இந்த அணி பின்னர் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டது. 

இதனால் வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்; பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயகுமார்; தாராபுரத்தில் களமிறங்கிய சத்யபாமா; அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். 

தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர். இதனால், நான்கு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் 5 பேரின் ராஜினமாவை ஏற்று 5 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவித்தார்.

இதனால் 5 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவு பெற்று, ஜூலை மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடைபெறும் என டெல்லி தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version