back to top
20.2 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம்: ஜெ.தீபா நையாண்டி - Kumudam

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம்: ஜெ.தீபா நையாண்டி – Kumudam

Date:

Related stories

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்...

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் – Kumudam

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் - Kumudam -...

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த...
spot_imgspot_img



 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு, காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி  உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

 

இதையடுத்து ஜெ.தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைக்கவில்லை. என்டிஏவோடு தான் கூட்டணி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுத்ததால் தான் கூட்டணியில் இடம் பிடித்துள்ளார் டிடிவி தினகரன்.

 

என்டிஏ கூட்டணி வெற்றி பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. இவர்களை கண்டு மக்கள் வெறுத்து போய்ட்டாங்க. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. என்னுடைய ஆதரவு தமிழ்நாட்டு மக்களுக்கு தான். மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு என்னுடைய ஆதரவு. 

 

விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது நியாயமான ஒன்று தான். தற்போது மேடைகளில் தவெக தலைவர் விஜய் பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசிய தான்.தவெக தலைவர் விஜய் அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார். 

 

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம். பங்காளிகள் உரிமை கோரும் சொத்து யாருடையது என்பது என்பது பிரச்சினை. அதிமுக தொண்டர்களுக்கு சொந்தமானது. அப்போது இருந்த அதிமுக போல முழு வீச்சில் தற்போது இல்லை. சசிகலா புது கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்காக காத்திருக்கிறேன். பார்க்கலாம். நான் அரசியலில் தான் இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். ஆனால் சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஜெயலலிதா வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியை அழைக்க அவரை சந்திக்க முயன்றோம். 

 

ஆனால் அவர் மதிக்க கூட இல்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி கூட அவரை அழைக்க முடியவில்லை. என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது. என்னை ஒதுக்க அவர் யார்? ஜெயலலிதாவிற்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்பது மறைக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு அரசியல் சாயம் இல்லை” என்று அவர் கூறினார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here