back to top
32.8 C
London
Friday, August 14, 2026
No menu items!
Homeஅரசியல்திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி: மா.கம்யூ, விசிக, மநீம சீட் ஒதுக்குவதில் சிக்கல் ...

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி: மா.கம்யூ, விசிக, மநீம சீட் ஒதுக்குவதில் சிக்கல்  – Kumudam

Date:

Related stories

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ….. வேலுமணி Vs பொன்னையன்! – Kumudam

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ..... வேலுமணி Vs...

“என் மகனுக்கு நீதி வேண்டும்”… உதயநிதியிடம் கதறிய அமுதனின் தாய் !

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின்...

“ரீல் விடுவதில்தான் குறியா?” – விஜயை விளாசிய எடப்பாடி!

தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல்...
spot_imgspot_img



கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், கூடுதல் தொகுதிகள் தரமுடியாது, மாறாக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தி.மு.க. கூறியதால், கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி ஆகின.

ஆனால்  காங்கிரஸ் கட்சி கடந்த முறையைவிட 3 தொகுதிகள் கூடுதலாக, அதாவது 28 இடங்களை பெற்றுக்கொண்டது. இதேபோல், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடினாலும், ம.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள் குறைவாகவும் (4), இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 தொகுதி குறைவாகவும் (5) திமுக ஒதுக்கியது. 

தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கூடுதல் தொகுதிகளுக்காக தி.மு.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் மா.கம்யூ 5 , விசிக 6, மநீம 2 என திமுக திட்டமிட்டுள்ளது. மநீம உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் டார்ச்லைட் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என மநீம பிடிவாதமாக உள்ளார். 

ஆனால் கடந்த முறை போட்டியிட 6 தொகுதிகளை விட அதிக தொகுதிகள் வேண்டும் என மா.கம்யூ கட்சி பிடிவாதமாக உள்ளது. அதே போன்று விசிகவும் 10 தொகுதிகள் வேண்டும் என திமுக தலைமையிடம் கறாராக சொல்லிவிட்டது.மநீம-கட்சியும் தங்களுக்கு குறைந்த பட்சம் 5 தொகுதியும் டார்ச் லைட் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் எனவும் தெரிவித்து வருகிறது. 

ஆனால், தே.மு.தி.க. வந்ததால்தான், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய 3 கட்சிகளும் தங்களுடைய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா?, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டு இருப்பதால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here