back to top
30.1 C
London
Wednesday, June 24, 2026
No menu items!
Homeதமிழ்நாடுமேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி: திருப்பரங்குன்றம் தீபத்தூண்டில் தீபம் ஏற்ற வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு  -...

மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி: திருப்பரங்குன்றம் தீபத்தூண்டில் தீபம் ஏற்ற வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இரு நீதிபதிகள் அமர்வில் டிச., 18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று (ஜனவரி 06) காலை, 10:30 மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசிக்க தெடங்கினர். 

அந்த தீர்ப்பில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்துாண் உள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது. தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். சண்டை போடக்கூடாது.

மாவட்ட நிர்வாகமே பிரச்னையை உருவாக்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை இல்லை. மத்திய தொல்லியல் துறை உதவியுடன் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here