Home அரசியல் ’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  –...

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

0


சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் இடையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  கேள்வி : உங்களை தொடர்ந்து துணை முதல்வர் விமர்சித்து வருகிறாரே..?

இபிஎஸ் : அவருக்கு பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை, அரசியல் ரீதியாகப் பேசினால் பதில் சொல்லலாம். திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடி நாங்களும் கொடுப்போம்.

கேள்வி : திமுக கோட்டை சென்னை என்று சொல்கிறார்கள், இதில் அதிமுக வெற்றி பெறுமா..?

பதில் : நீங்களும்,அவர்களும் தான் அப்படி சொல்கிறீர்கள். இனி சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்…

கேள்வி: தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றியதற்கு சி.எம். எதிர்ப்பு தெரிவிக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட தலைமை செயலாளரோ ,டிஜிபியோ மாற்றப்படவில்லை என்று விமர்சித்து இருக்கிறார்..?

இபிஎஸ் : ஏன்… 5 ஆண்டுகள் காவடி தூக்கிக்கொண்டு இருந்தார்கள், அவர்களே இருக்க வேண்டுமா..? .அவர்கள் அதிகாரிகளை நம்பித் தான் இருக்கிறார்கள், மக்களை நம்பி இல்லை. நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் மாற்றுகிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்.? யார் வந்தால் இவர்களுக்கு என்ன..? 

நமக்கு மக்கள் தான் முக்கியம். மக்கள் தான் ஓட்டு போடுகிறார்கள். அதன் அடிப்படையில் யார் அதிகாரிகள் என்று அதிமுக பார்ப்பது இல்லை. திமுக ஆட்சியில் இருந்தது அந்த அதிகாரிகள் தானே? அவர்கள் திமுக அரசுக்கு கூஜா தூக்கிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் எதிர்ப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு போய் இருக்கிறது. அந்த அடிப்படையில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்து தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version