Home அரசியல் கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர், ஒரு வேளை சோறு போட்டதில்லை: சீமான் மீது இலங்கை எம்பி காட்டம் ...

கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர், ஒரு வேளை சோறு போட்டதில்லை: சீமான் மீது இலங்கை எம்பி காட்டம்  – Kumudam

0



தமிழகம் வந்துள்ள இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனன், சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழக மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்னையை பேசினார். விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. 

பிரசாரத்திற்கு மட்டும் சீமான் இலங்கை தமிழர் பிரச்னை சீமான் பேசுகிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே சீமான் ஈழதமிழர்களை பயன்படுத்துகிறார். யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரத்தில் வசிக்கும் எங்களது மக்களை சந்தித்து ஒரு வேளை சோறு  கூட சீமான் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் அந்த மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை தன்னுடைய அரசியலுக்காக சீமான் வாங்கி உள்ளார். 

இலங்கையில் ஈழமக்கள் துன்பத்தை பேசும் சீமானின்  மகன் அமெரிக்காவில் படிக்கலாம். சீமான் மீது எனக்கு  தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த கோபமும் கிடையாது. சீமான் சொல்லும் ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான். இவ்வாறு இலங்கை எம்பி தெரிவித்தார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version