Home தமிழ்நாடு தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  –...

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

0



தமிழகம் முழுவதும் சுமார் 1,689-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.சென்னை மண்டலம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 470-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 215-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன.

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி விநியோகம் செய்யப்படும் குடிநீர் கேன்கள் சில தரமற்றவையாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‘குடிநீர் கேன்களில் நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். குடிநீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது. பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது. 

குடிநீர் கேன்களை நேரடியாக வெயிலில் படும்படி வைக்க கூடாது. விதிகளை மீறும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’. தரமற்ற குடிநீர் கேன்களை விற்பனை செய்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும். கேன் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version