Home அரசியல் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய் – Kumudam

இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய் – Kumudam

0



108 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 5 என 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கோரி நேற்றைய தினம் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து உரிமை கோரி இருந்தார். ஆனால் விஜயை முதல்வராக பதவியேற்க ஆளுநர்  அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தவெக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்நிலையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதிமுக பதவி ஏற்க வைக்க பாஜக விரும்புவதாகவும், அதற்காகவவும் தவெகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. 

2-வது முறையாக ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் நேற்று  கிண்டி மக்கள் பவனுக்கு சென்றார். அப்போது அவரது கார் தவிர வேறு கார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆளுநர் சந்திக்க விஜய் நீண்ட நேரம் காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 30 நிமிடம் காத்திருப்புக்கு பிறகே ஆளுநர் விஜய் சந்திப்பு நடந்தது. 

3-வது முறையாக இன்றைய தினம் மீண்டும் ஆளுநரை விஜய் சந்திக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10-ம் தேதி வரை தவக 118 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்தால், ஆட்சி அமைக்க அழைப்பதாக ஆளுநர் அர்லேகர் கூறியிருந்த நிலையில், இன்றைய ஆளுநருடனான விஜய் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version