Home அரசியல் ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் பதில் – Kumudam

ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் பதில் – Kumudam

0



ஆளுநர் அர்லேக்கரை இரண்டு முறை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்தார். ஆனாலும் ஆட்சி அமைக்க  ஆளுநர் தவெகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது. பாஜக தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்படுவதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

2வது முறையாக இன்று கவர்னரை விஜய் சந்தித்த நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தவெக தலைவர் விஜயை கவர்னர் மாளிகைக்கு நேரில் அழைத்து கவர்னர் அர்லேக்கர் பேசினார். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லை என்பதை தவெக தலைவர் விஜயிடம் கவர்னர் விளக்கினார். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் தவெக உச்சநீதிமன்றத்தை வழக்கு தொடர ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், பாஜக தனது சொந்த நலனுக்காக அரசியலமைப்பை சிதைக்க பார்க்கிறது.  ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். கபில்சிபில் குற்றம்சாட்டியுள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version