back to top
20 C
London
Tuesday, July 7, 2026
No menu items!
Homeஅரசியல்நடிகர் விஜய் மனு தள்ளுபடி: ரூ 1.50 கோடி அபாரதம் செலுத்த நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ...

நடிகர் விஜய் மனு தள்ளுபடி: ரூ 1.50 கோடி அபாரதம் செலுத்த நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  – Kumudam

Date:

Related stories

இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய பழக்கம்-இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய மகன்,...

போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது 

நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த...
spot_imgspot_img



நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டுபிடித்தனர்.

இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இறுதி விசாரணைக்காக வந்தது.

அப்போது விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை ஐகோர்ட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்ததனர். இந்த நிலையில், வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததற்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார். 

புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி  வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here